Hi manisat
#ref-menu

Saturday, March 17, 2018

ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன்? தொழில்நுட்ப கோளாறுகளுக்கு என்ன காரணம் ?

ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன்? தொழில்நுட்ப கோளாறுகளுக்கு என்ன காரணம் ?


2016-ல் டெலிகாம் சந்தையில் ஜியோ ஏற்படுத்திய அதிர்வு இன்னும் அடங்கவில்லை. அறிமுக சலுகையாக இலவச வாய்ஸ்கால், இலவச 4G என ஆஃபர்களை அள்ளிவீசியதன் மூலம் பல மில்லியன் மக்களை மிக விரைவில் வாடிக்கையாளர்களாக மாற்றியது ஜியோ. அதற்கு பின்னும் குறைவான கட்டணத்தில் 4G சேவையை வழங்கவே தொடர்ந்து ஜியோ பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இதனால் இந்திய டெலிகாம் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. எல்லா நிறுவனங்களுக்கும் வருமானத்தில் அடி விழுந்தது. சிலர் அதை சமாளித்தனர்; சிலர் அதில் வீழ்ந்தனர். அப்படி சமீபத்தில் வீழ்ந்த நிறுவனம் ஏர்செல். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஏர்செல்லின் டவர்கள் அனைத்தும் திடீரென செயலிழக்கவே, செய்வதறியாது திகைத்தனர் அதன் வாடிக்கையாளர்கள். சரி, உடனே வேறு நெட்வொர்க்கிற்கு மாறலாம் என்றால் போர்ட் கோடு கிடைப்பதிலும் சிக்கல்கள் எழுந்தன. இதனால் ஏர்செல் சிம்மையும் பயன்படுத்த முடியாமல், வேறு நிறுவனத்திற்கும் மாறமுடியாமல் இன்னும் பல கோடிக்கணக்கான ஏர்செல் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் திணறி வருகின்றனர்.

ஏர்டெல்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சில சம்பவங்கள் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் இடையே சின்ன சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் ஏர்டெல் நெட்வொர்க்கிலும், நேற்று சில இடங்களில் வோடஃபோன் நெட்வொர்க்கிலும் சேவை பாதிக்கப்பட்டது. இது என்ன பிரச்னை என்றே தெரியாமல் தவித்தனர் வாடிக்கையாளர்கள்.

இறுதியில் ஏர்டெல் நிறுவனம், "சிறிய தொழில்நுட்ப கோளாறுதான்; சரிசெய்துவிட்டோம். மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்யுங்கள்" எனத் தெரிவித்தது.

வோடஃபோன் நிறுவனமும் தனது வாடிக்கையாளரிடம், "இது தற்காலிகமான பிரச்னைதான். விரைவில் நிலைமை சரியாகிவிடும்" எனக் கூறியிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களான இவற்றிற்கு என்னதான் ஆச்சு? ஏன் திடீரென இப்படி ஒரே நேரத்தில் பிரச்னைகளை சந்திக்கின்றன? டெலிகாம் துறையில் இருக்கும் சில நிபுணர்களிடம் விசாரித்தோம்.

"ஏர்செல்தான் இந்தப் பிரச்னையின் மையப்புள்ளி. பிப்ரவரி மாத இறுதியிலேயே ஏர்செல் நெட்வொர்க்கில் பிரச்னை தொடங்கிவிட்டது. அப்போது எல்லா நிறுவனங்களும், படிப்படியாக ஏர்செல் செயலிழக்கும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தன. ஆனால், அந்நிறுவனம் திடீரென மொத்தமாக செயலிழந்துவிட்டது. எனவே அந்நிறுவனத்தின் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உடனே வேறு நெட்வொர்க் மாறத்தொடங்கிவிட்டனர். இதனை எந்த டெலிகாம் நிறுவனமும் எதிர்பார்க்கவில்லை. எனவே, புதிய வாடிக்கையாளர்களை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளையும் உடனே செய்யமுடியவில்லை. தற்போது ஏர்டெல் மற்றும் வோடஃபோன் இரண்டும் தங்கள் கட்டமைப்பை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால்தான் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது.

ஏர்செல்

பிப்ரவரி இறுதி முதல் மார்ச் மாதத்திற்குள் மட்டும் சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் ஏர்செல்லில் இருந்து ஏர்டெல்லுக்கு மாறியிருக்கிறார்கள். இதேபோல வோடஃபோன் நிறுவனத்திற்கு 10 லட்சம் வாடிக்கையாளர்களும், 
தமிழ்நாட்டில் மட்டும்
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சுமார் 3 லட்சம் வாடிக்கையாளர்களும் 
ஏர்செல் நெட்வொர்க்கில்
இருந்து வந்திருக்கின்றனர்.

இதன் இந்த எண்ணிக்கை இன்னும் கூடிக்கொண்டே செல்லும்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்தளவு உயர வேண்டுமானால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு ஆண்டாவது ஆகும்.

ஆனால், ஏர்செல் பிரச்னையால் தற்போது திடீரென உயர்ந்திருக்கிறது. இன்னும் பலரும் போர்ட்டபிலிட்டி வசதிக்காக காத்திருப்பதால் இன்னும் உயரும். இந்த எண்ணிக்கையை சமாளிக்கும் அளவிற்கு இப்போதுதான் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் இவையெல்லாம் சரியாகிவிடும். நிறுவனம் திவாலாக போகிறது என்பதெல்லாம் துளியும் உண்மையில்லை.

நேற்று முன்தினம் ஏர்டெல் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட பிரச்னை போஸ்ட்பெய்டு நெட்வொர்க்கில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறால் வந்தது. சரியாக 3 மணிக்கு துவங்கிய சிக்கல் 7 மணிக்குள்ளாகவே சரிசெய்யப்பட்டுவிட்டது. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. சில குறிப்பிட்ட போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டனர். சில மொபைல் போன்களில் தானாகவே டவர் வந்துவிட்டது; சில மொபைல் போன்களில் ஸ்விட்ச் ஆப் செய்து ஆன் செய்ய வேண்டியிருந்தது. நேற்று வோடஃபோனில் ஏற்பட்ட சிக்கலும் இதேபோல தொழில்நுட்பக்கோளாறினால்தான்.

ஜியோவின் வருகைக்குப் பின்னர் எல்லா டெலிகாம் நிறுவனங்களிலும் வருவாய் பாதிக்கப்பட்டது உண்மைதான். முதலில் குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்க மற்ற டெலிகாம் நிறுவனங்களால் முடியவில்லை. தற்போது அந்த நிலைமை ஓரளவிற்கு சரியாகிவிட்டது. இன்னும் தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்வதால், ஏர்செல் வாடிக்கையாளர்கள் சிக்கல்கள் எப்படியும் இன்னும் ஓரிரு மாதங்களாவது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More