இன்றைய செய்திகள் 07/03/2018 Today News Tamil
________________________________
🔵⚪ *ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 MLA-க்கள் தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு*
*11 MLA-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்*
🔵⚪ *வாதங்கள் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்*
🔵⚪ *I have removed that admin who posted the comment about #Periyar and have deleted the post. I totally condemn vandalizing statues and violence. I express heartfelt regret for my Facebook post: H Raja,BJP*
🔵⚪ *திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய பா.ஜ.க. நகர செயலாளரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர், மன்னிப்பு கேட்டதையடுத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது*
🔵⚪ *இந்தியாவின் முதல் 'ஹெலி டாக்சி' சேவை பெங்களூருவில் தொடக்கம்: 40 கி.மீ தூரத்தை 15 நிமிடங்களில் கடக்கலாம்*
*பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நகருக்கு 'ஹெலி டாக்சி' சேவை தொடங்கப்பட்டுள்ளது.*
🔵⚪ *கோவை : சித்தாபுதூரில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.*
*🔵⚪BREAKING | கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் மீது அதிகாலை 3.30 மணியளவில் 2 பெட்ரோல் குண்டுகள் வீச்சு; ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் புகார்*
பெரியார் சிலை உடைப்பு எதிரொலியா என போலீசார் விசாரணை..!
________________________________
இன்றைய நிகழ்வு...
நாளைய நினைவு...
*12pm-7-3-2018-wednesday-புதன்கிழமை*
♈🇮🇳 பெரியார் சிலையை சேதபடுத்திய முத்துராமன் பா.ஜ.,விலிருந்து நீக்கம்
♈🇮🇳 உயிருக்கும் சிலைக்கும் என்ன வித்தியாசம் –வாழ்ந்து நெஞ்சில் நின்று மறைந்தவர் சிலையாகிறார் ----இன்று உயிர் வாழ்பவர்கள் எதற்கு ,எப்படி , ஏன் மறைகிறோம் என்று தெரியாமலேயே செல்கின்றனர் – வாழகைக்கு உதவ யாருமில்லை -இறந்தால் அரசியலுக்கு லாபம் – உதவி செய்திருந்தால் ஒரு மருத்துவரை இழந்திருக்க மாட்டோம் -முடிந்தால் இறப்பதற்கு முன் உதவுங்கள் ♈🇮🇳
♈🇮🇳 வார்த்தை மீறல் தினம்’’ பேரணி!!!!!?????? தமிழ்நாட்டில் ♈🇮🇳 "யு கே நீதிமன்றம் இந்தியாவை சார்ந்த ஒரு குடும்பம் தன் குழந்தையுடன் இந்தியா செல்வதற்கு தடை விதித்தது .அக் குழந்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத" பிறப்புறுப்பு சிதைவு செயல்முறை ஆபத்தில் இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது
♈🇮🇳 ஒரு காவலர் பணி சுமையால் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் மற்ற காவலர்களுக்கு பணி சுமை இல்லையா ??? அவர்களெல்லாம் விடுமுறையில் சென்று விட்டனரா ????இவர் மட்டுமே சென்னை மாநகர காவல்துறை பணிகளை பார்த்துக் கொண்டாரா ???? பல மாதங்களுக்கு முன்னர் விஸ்வரூபதிடம் காவல் நிலைய குறைபாடுகளை தவறுகளை கூறினார் .செய்திகள் பதிவிட்டு பல மாதங்களாகிவிட்டது. எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தீபொறி பறக்க சென்ற வீடியோவும் அவரால் எனக்கு கொடுக்கப்பட்டது. தவறுகளை சுட்டிக்காட்டிய ஒருவர் பணி சுமையால் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பமே சொல்லும்போது மிகவும் வேதனையாக உள்ளது . யாரோ ஒருவர் மூலமாக தெரிந்து கொண்டு விஸ்வரூபத்தை அணுகினார். துணிவிருந்ததால் பிரச்சனைகளை கொண்டு வந்தார் .அப்படிப்பட்ட நல்ல மனிதருக்கு கிடைக்கும் பட்டம் ...அய்யோ
♈🇮🇳 ஹார்வர்ட் பல்கலைக் கழக அரசு பேராசிரியர் ஒருவர் செவ்வாயன்று தன்னால் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியதால் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக கூறினார்-வாஷின்டன்
♈🇮🇳 தமிழகத்தில் ஒன்று கொல்கொத்தாவில் ஒன்று எச் .ராஜாவின் தவறான சொற்களால் தமிழகத்தில் “வார்த்தை மீறல் தினம்’’ பேரணி நடத்துவார்களா - பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை உருவம் கொல்கத்தாவில் கரோரடாவில் சிதைக்கப்பட்டது அழிக்கப்பட்டார். பொலிஸ் ஆறுபேரை காவலில் வைத்துள்ளனர் . "சட்ட மீறல் தினத்தை" கடைபிடிப்பதாகவும் கொல்கத்தாவில் பேரணி நடத்தப்படும் என்றும்,பி ஜெ பி கட்சி அறிவித்துள்ளது
♈🇮🇳 கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு: மனைவி புகார். தன்னை ஷமி அடித்து துன்புறுத்துவதாகவும் ஹசின் ஜகான் புகார்
♈🇮🇳 தலைவர்கள் மற்றும் சிலைகளை அவமரியாதை செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிற்கு தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்
♈🇮🇳 சிலை உடைப்பு சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்
♈🇮🇳 நேரம் தேதி குறித்தால் பெரியார் தொண்டர்கள் சவாலை சந்திக்க தயார் என எச் ராஜாவுக்கு நடிகர் சத்யராஜ் பதிலடி கொடுத்துள்ளார்
♈🇮🇳 பெரியார் சிலை உடைப்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க திமுக, அதிமுக எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்
♈🇮🇳 பெரியார் போன்ற தலைவர்களையோ அவர்களது சிலைகளையோ அவமதிக்கும் கருத்துகளையும் செயல்களையும் பாஜக ஒரு போதும் ஆதரிக்காது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்
♈🇮🇳 விஷ விதைகளை தூவி ஆதாயம் தேட வேண்டாம்.. எச். ராஜாவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
♈🇮🇳 இலங்கையில் தமிழர்களைப் போல முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த நேரிடும் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
♈🇮🇳 லெனின், தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்
♈🇮🇳 மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இருளை நீக்கும் ஒளிவிளக்காக பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் வாழ்வில் எதிர்வரும் இடர்களை அஞ்சாமல் பெண்கள் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்
♈🇮🇳 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை காக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாஷ் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் பல இடங்களில் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருப்பதாக பதற்றம் நிலவுவதாக அவர் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கை பேணி காக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் முறையிட்டுள்ளார். மேலும், அவசர வழக்காக விசாரிக்குமாறும் நீதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
♈🇮🇳 முதலமைச்சர் சித்தராமையா கூறியதால், சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கினேன் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா அளித்துள்ள மனுவில் கூறியுள்ளார். சசிகலாவுக்கு கட்டில், தலையணை போன்ற சலுகைகள் வழங்கியதாக மனுவில் சத்தியநாராயணா தகவல் தெரிவித்துள்ளார்
♈🇮🇳 முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 3ம் நாளாக மாவட்ட ஆட்சியர்-காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது. இறுதி நாளான இன்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்
♈🇮🇳 பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது
♈🇮🇳 பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினி
♈🇮🇳 பெரியார் சிலை உடைக்கப்படும் என்று எச் ராஜா வெளியிட்ட கருத்தை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
0 comments:
Post a Comment