Hi manisat
#ref-menu

Saturday, March 3, 2018

இன்றைய செய்திகள் 03/03/18 Today Tamil News

இன்றைய செய்திகள் 03/03/18 Today Tamil News
♈🇮🇳🌴 *8.30pm-3-3-2018-saturday-சனிக்கிழமை*  🌴🇮🇳  ♈ ♈ 🇮🇳🌴  *



♈🇮🇳🌴 விஜய் டி வியில் நாஞ்சில் சம்பத்  இவங்க கேலி செய்றாங்களா எவ்வளவு பணம் பெற்றார் நாஞ்சில் சம்பத்
♈🇮🇳சென்னை காவல்துறை கட்ட பஞ்சாயத்தில் செல்கிறது-கார்களை திருடி விற்கிறது . பாலியல் செய்த நபருக்கு துணை போகிறது .இது எங்கே போகிறது  

♈🇮🇳தமிழக ஆளுநர் ஐயா இன்னும் பி எஹ்டி பட்டம் பெற்ற நபர்களை பற்றிய விஷயங்களுக்கு வரவில்லை .அண்ணா பல்கலை பிரச்சனை பற்றி விசாரிக்கவில்லை .துணை வேந்தர்களுக்கு கவர்னர் எச்சரிக்கை.உங்களுக்கு முன்பு இருந்தவர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கு என்று சொன்னால் என்ன செய்வீர்கள்

♈🇮🇳மசூதியில் தொழுகை நடைபெற்றதால், பாஜக தொண்டர்களுடனான உரையை நிறுத்தி அமைதிகாத்தார் பிரதமர் நரேந்திர மோடி.மாலையில், வெற்றிச் செய்தியை தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்டாட டெல்லியில், பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடத்திற்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. அவர் உரையை ஆரம்பித்த சில வினாடிகளில், அருகேயுள்ள மசூதியில் மாலை நேர தொழுகை நடந்தது

♈🇮🇳வானிலை ஆய்வுக்காக ரூ. 70,000கோடி செலவில் ‘கோஸ் எஸ்’... வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா!

♈🇮🇳அண்மையில் வெளியான மனுசனா நீ படத்தை திருட்டு விடியோவாக இணையத்தில் பதிவேற்றிய தியேட்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்..திரையரங்கத்தின் பெயர்: முருகன் திரையரங்கம் ஊர்: கிருஷ்ணகிரி எடுக்கப்பட்ட நாள்: 16.02.2018 எடுக்கப்பட்ட நேரம்: மாலை 07.05.39 லிருந்து 08.57.01வரை. நான் கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தைத் தயாரித்து, மேலும் பல லட்சங்கள் செலவு செய்து சொந்தமாகப் படத்தை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்தேன். நல்லவிதமான எதிர்பார்ப்பு வந்து, படத்துக்குப் பல இடங்களிலிருந்தும் வியாபார வாய்ப்பு வந்த நேரத்தில் இவர்கள் செய்த செயலால் பெரிய அளவில் நஷ்டப்பட்டு, என்ன செய்வது என்று தெரியாத நிலையில் 'அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு' - க்கு மனு கொடுத்து சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர் மற்றும் ஆபரேட்டர் ஆகியோர்மேல் புகார் கொடுத்தேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 ♈🇮🇳  இந்தோனேஷியாவில் ராட்சத முதலை ஒன்றின் வயிற்றில் இருந்து மனிதனின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

♈🇮🇳  பிள்ளைகளை பெற்று வச்சி உயிரோட கொல்லும் தந்தைகள் இந்தியாவில் உள்ளனர். அமெரிக்காவில் மனைவி கென்யாவுக்கு சென்றிருந்த நேரத்தில் ஒரு வயது மகளை கொடூரமாக கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

♈🇮🇳சுவிஸில் நடந்த கூட்டம் ஒன்றில், சிரியாவில் நடத்தப்படும் போர்த்தாக்குதல்கள் குறித்து, ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணைய பேரவை தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது

♈🇮🇳 மருத்துவ சோதனைக்கு பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜய், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்தார். அப்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், கேரள முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு ஒருசில நிமிடங்கள் மட்டும் நடந்ததாகவும், இதுவொரு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றும் இருதரப்பினர்களும் தெரிவித்தனர் ♈🇮🇳*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More