இன்றைய செய்திகள் 03/03/18 Today Tamil News
03/03/18 !
அயோத்தி விவகாரத்தில் கூட்டு முயற்சியாக நல்ல முடிவு எட்டப்படும் - அபூபக்கர், ஹஜ் கூட்டமைப்பு தலைவர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது - அமைச்சர் ஆர்பி. உதயகுமார்.
திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.
தமிழக அரசின் நெடுஞ்சாலை பணிகளை ஆன்லைன் மூலம் டெண்டர் விடுவதால், ஊழல் நடப்பதற்கு வாய்ப்பில்லை - முதல்வர் பழனிசாமி.
கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் தற்போது எந்த நிலையில் உள்ளாரோ அந்த நிலைதான் கமலுக்கும் ஏற்படும் - முதல்வர் பழனிசாமி.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
சென்னை பாரிமுனையில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 5 சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு.
காவிரிக்காக திமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய தயார் என ஸ்டாலின் கூறுவது கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது போலவா ? - தமிழிசை.
குன்னூர் : மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் காட்டு தீ பல ஏக்கர் மரங்கள் எரிந்து சேதம்.
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில் குழந்தைகள் நலன், கண்மருத்துவ மேற்படிப்புகளை தொடங்க அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டது இந்திய மருத்துவ கவுன்சில்.
மும்பையிலிருந்து போதைப் பொருள் கடத்திய வழக்கில், இலங்கையைச் சேர்ந்த சஹாப்தீன் சென்னையில் கைது போலி பாஸ்போர்ட் பறிமுதல்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வுக்கான அடுத்த கட்ட ஆலோசனை மார்ச் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடக்கிறது; 6-ம் தேதி தஞ்சை, 7-ம் தேதி திருச்சி, 8-ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர், 9-ம் தேதி நாகை மற்றும் திருவாரூர்.
0 comments:
Post a Comment