Hi manisat
#ref-menu

Saturday, March 10, 2018

பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் சிம்கார்டு வாங்க குவிந்த மக்கள்

பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் சிம்கார்டு வாங்க குவிந்த மக்கள்


சிதம்பரத்தில் தனியார் மொபைல் டவர் சரியாக செயல்படாததால், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் சிம்கார்டு வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.கடந்த ஒரு மாதமாக ஏர்செல் சிக்னல் தடைபட்டதால், அதன் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனம் வழங்கும் போர்ட் எண் மூலம் தாங்கள் விரும்பிய நெட் ஓர்க்கிற்கு மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. ஆனால் ஏராளமானோருக்கு போர்ட் எண் கிடைக்கவில்லை.சிதம்பரம் பகுதியில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பலர் பி.எஸ்.என்,எல்., நெட் ஒர்க்கிற்கு மாறி வருகின்றனர். ஏர்செல் சிம் பயன்படுத்திய பெரும்பாலானவர்கள் சிம்கார்டு பி.எஸ்.என்.எல்., வாங்க அலுவலகத்தில் குவிகின்றனர்.ஏர்செல் போர்ட் எண் கிடைத்தவர்கள் அதே எண்ணில் பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெறுகின்றனர். போர்ட் எண் கிடைக்காதவர்கள் புதிய சிம் வாங்கிக்கொள்கின்றனர்.இதனால், சிதம்பரத்தில் வண்டிகேட், தெற்கு சன்னதி தெரு, அண்ணாமலை நகர் போன்ற அனைத்து பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களிலும் அதிக அளவில் கூட்டம் காணப் படுகிறது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More