*இருசக்கர வாகனம் மீது வேன் மோதி இருவர் உயிரிழப்பு*
☀திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். நடுவர் மாதா குப்பத்தை சேர்ந்த மார்சல், நிர்மல் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
☀அப்போது பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கிச் சென்ற வேன், கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
☀வேன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வேனில் அதிக ஒலியுடன் பாடல் கேட்டு வந்ததும், செல்போன் பேசியபடி ஓட்டியதுமே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
வேன் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்
0 comments:
Post a Comment