Hi manisat
#ref-menu

Saturday, March 17, 2018

இன்றைய மணிசாட் செய்திகள் 17/03/18 Today Tamil ManisatNews


இன்றைய மணிசாட் செய்திகள்  17/03/18 Today Tamil ManisatNews

17-3-2018-saturday-சனிக்கிழமை*   


♈🇮🇳 சோழாவரம் காவல் நிலையம் உடந்தையாக இருக்குமோ திருடர்கள் தப்பியோட  ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை காரில் கடத்தி வந்த இருவர் தப்பியோடினர் . பல தவறுகள் நடக்கும் இடம்-வருமானம் கொழிக்கும் இடம்  

♈🇮🇳 முகேஷ் அம்பானி மகளுக்காக தான் ஜியோ தொடங்கப்பட்டுள்ளது .நாம நெட் வொர்க் ஆகவில்லை என்றால் எவ்வளவு அவதி படுகிறோம். அவர் மகள் பட்ட துன்பத்திற்கு தொடங்கப்பட்டது ஜியோ என்றால் மகளின் மீது எவ்வளவு பாசம் அவருக்கு

♈🇮🇳 தம்பிதுரைக்கு தெரியாத அரசியலா .நிறைய பேர மாண்புமிகு ஆர் எம் வீரப்பன்  ஐயா,  திருநாவுகரசர் , கே கே எஸ் எஸ் ஆர்,  கண்ணப்பன் இன்னும் நிறைய பேர் பார்த்த - அரசியலில் சகஜமங்க ---தன்னந்தனியாக மட்டும் சுமார் அரை மணி நேரம் காத்திருந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்,வேளாண் அறிவியல் மையம் சார்பில், கரூரில் வேளாண் அறிவியல் மையங்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் பயிர் ரகங்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் 25 புதிய வேளாண் அறிவியல் மையங்களுக்கான அடிக்கல் நடுதல் மற்றும் விவசாயிகளுக்கான உரை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

♈🇮🇳 ''பதறிய காரியம் சிதறிவிடும்'' என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.NPA, அதாவது வாராக்கடன் என்பது வங்கிகளுக்கு மிகப்பெரிய தலைவலி. நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு இறுதி காலாண்டில் 2,416கோடி ரூபாய் வாராக்கடனால் நஷ்டம் ஏற்பட்டது. வாராக்கடன் வங்கிகளுக்கும் நல்லதல்ல,முதலீட்டாளர்களுக்கும் நல்லதல்ல.இப்போது, பாதை கரடுமுரடாக இருக்கிறது. அதனால் எடுத்து வைக்கும் அடியை அளந்து வையுங்கள், கவனமாக வையுங்கள்.பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையும் நிலையானதல்ல, அதன் வீழ்ச்சியும் நிலையானது அல்ல; ஷேர் மீண்டும் உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்றும் சொல்ல முடியாது.சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்போது, உங்கள் நிதித் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.EMI-க்காக அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தால், உயரும் வட்டி விகிதங்களின் தாக்கம் அதில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன என்பதை கவனமாக பார்க்கவும்.குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கடனை திரும்பச் செலுத்துவது பற்றி ஒரு முறை யோசிக்கலாம்.உங்கள் portfolioவை மீண்டும் ஆராயுங்கள். அதாவது முதலீடுகளை ஒரே விதமாக அல்லாமல் பல்வேறு வகை முதலீடுகளாக செய்யலாம்.சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வீழ்ச்சி பற்றிய தகவல்களை கேட்டு, அச்சத்தால் உடனடியாக பணத்தை திரும்ப எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.''பதறிய காரியம் சிதறிவிடும்''என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பங்குச் சந்தை நிலைகுலையும்போது, ஒரு நல்ல நிதித்திட்டம் மற்றும் முதலீடு பற்றிய ஆய்வு உங்களுக்கு உதவும்

♈🇮🇳 '90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்', உடல் மீதான பெண்களின் சுயவெறுப்புக்கு அவர்களுடைய தாயின் பொறுப்பும் முக்கியமானது. 'CHUP: Breaking the Silence About India's Women

♈🇮🇳 அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரிகளை தொடர்ந்து பணிநீக்கம் செய்துவரும் நிலையில் தற்போது எஃப்.பி.ஐ துணை இயக்குநர் ஆண்ட்ரூ மெக்காப், வெள்ளிக்கிழமையன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

♈🇮🇳 இன்று மாலை சென்னை ராயபுரத்தில் எஸ் என் சாலை பழைய ராயபுரம் எதிரில் ஒரு அரசு பேருந்து ஓட்டுனரை யாரோ தாக்கியதால் அந்த பேருந்தோடு மேலும் இரண்டு பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டு ஓட்டுனர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் பெரிய போக்குவரத்து பிரச்சனையாகுமோ என்று நினைத்தனர். ஒரு மணி நேரத்திற்குள் போக்குவரத்து இயல்பாகியது   
♈🇮🇳 ஒரு காவலரின் ஆதங்கம் --- வணக்கத்திற்கு வாகனவோட்டிகளே சிவப்பு விளக்கு எறிந்தாலும் நிற்காமல் செல்வதும் கையசைத்து நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதும் அதையும் மீறி ஒறுமையில் திட்டிக்கொண்டு செல்வதும் எங்களுக்கு மிகுந்த மனமகழ்ச்சியும் உங்களின் பெற்றோருக்கு பெரும் பெருமையும் சேர்க்கின்றீர்

♈🇮🇳 ஓலா, உபேர் கால் டாக்சி நிறுவனங்களுக்காக கார் ஓட்டுபவர்கள் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்

♈🇮🇳 ஒக்க நிமிஷம் திங்க் -- சந்திரபாபு காரு பிளானு தெரிலேது தமிழக மக்களுக்கு எவரேக்கும் - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக, ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு மாநில தகுதி வழங்குவதாக கூறுவது ஆந்திராவுக்கான பா.ஜ.கவின் சிறப்பு திட்டமாக இருக்கலாம். அதோடு,இதையே காரணமாக தெரிவித்து, ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து மாநிலத்தில் தனது காலை வலுவாக ஊன்றுவதும் பி ஜெ பி . 

♈🇮🇳 BT/HM  promotion counselling postponed.Date will be intimated later.please  follow it

♈🇮🇳 பழநி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி,வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி தீப்பிடித்தது

♈🇮🇳 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளதா இல்லையா என பள்ளிகளில் அறிவிப்புப் பலகை வைப்பதை மாநில கல்வித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

♈🇮🇳  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட புகையிலையை பதப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

♈🇮🇳 கரூரில் லாரி ஓட்டும்போது வலிப்பு ஏற்பட்டதால்,  ஓட்டுநர் சாதுரியமாக லாரியை நிறுத்தி விபத்தை தவிர்த்தார்

♈🇮🇳 திருச்சி விமான நிலையத்தில் பணிக்கு ஆள்தேர்வு நடைபெறுவதாக வரும் பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்

♈ 🇮🇳    புதுச்சேரி அருகே மாணவனை பள்ளிக்குள் வைத்து பூட்டிய விவகரம் தொடர்பாக தலைமையாசிரியை மற்றும் வகுப்பாசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
♈🇮🇳 பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரியும், அவரது மகளும் நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நஞ்சால் தாக்குதலுக்குள்ளானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் பிரிட்டனின் 23 ராஜீய அதிகாரிகளை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றவுள்ளது

♈🇮🇳 பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், அஞ்சலி பட்டேல், சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம், வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ் : த இன்பினிட்டி வார்’. ஆண்டனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள இந்தப் படத்தில், 23 ஹீரோக்கள் நடித்துள்ளனர். இந்தப் படமும் ஏப்ரல்27ஆம் தேதி ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் உள்ள ‘அவெஞ்சர்ஸ்’ ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்தியாவைத் தாண்டி மலேசியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ரஜினிக்கு ரசிகர்கள் இருப்பதால், ‘காலா’ படம் உலகின் பல்வேறு பகுதிகளில் ரிலீஸாகும். எனவே, ‘அவெஞ்சர்ஸ்’ படத்துடன் ‘காலா’ படம் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 23 ஹீரோக்களை எதிர்த்து ஒற்றை ஆளாக ரஜினி சாகசம் நடத்துவாரா என்பதைப் பார்க்கலாம்.

♈🇮🇳 காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் ரவுடி கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்  தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட கார்த்தி, ரமேஷ். சத்யா, சதீஸ், ஆசிம் ஆகிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்

♈🇮🇳 பீகாரில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

♈🇮🇳 புதுச்சேரி அருகே ஏரியில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவி பலி

♈🇮🇳 தென்காசி, கம்பத்தில் பரவலாக மழை

♈🇮🇳 கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலாளராக ராஜா,இணைச்செயலாளராக சிவானந்தம்,துணைச்செயலர்களாக கீதம் ரவி,ஜவகர், லோகநாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக குமார், ரமேஷ்,மதன், கோபி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

♈🇮🇳 திரைப்பட ஸ்டிரைக் குறித்து கமல்ஹாசனுடன் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
♈🇮🇳 நீதிமன்றங்களில் காலியாக உள்ள3,400 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து தாலுகாக்களிலும் விரைவில் நீதிமன்றங்கள் திறக்கப்படும் என்றும் இதற்காக பட்ஜெட்டில் ரூ.659.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

♈🇮🇳 நெல்லை மாவட்டம் மாணவர்கள் பார்வை பாதிப்புக்கு ஆளான விவகாரத்தில் பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

♈🇮  சென்னை அடுத்த சோழவரம் அருகே 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜனப்பன்சத்திரம் கூட்டுசாலையில் கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது


*🔵⚪ சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன் நடிகர் விஷால் சந்திப்பு*

*🔵⚪ கோடை குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் நீர் திறப்பு 500 கனஅடியிலிருந்து 2500 கனஅடியாக அதிகரிப்பு*


🔵⚪ *ஏப். 4 முதல் மே 27 வரை, இரவு 11.10 மணிக்கு ராமேஸ்வரம் - எர்ணாகுளம் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்.*


*🔵⚪சமரசத் தொகையை பெற்றுகொண்டு டொனால்ட் டிரம்ப்புடன் வைத்திருந்த பாலியல் தொடர்பை அம்பலப்படுத்திய ஆபாச நடிகையிடம் 2 கோடி டாலர் இழப்பீடு கேட்க டிரம்ப் வக்கீல்கள் தீர்மானித்துள்ளனர்*

*🔵⚪லாலு பிரசாத் யாதவ் ஆஸ்பத்திரியில் அனுமதி*


*🔵⚪சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் வீடு புகுந்து 150 சவரன் நகைகள் கொள்ளை*


 *🔵⚪நெஞ்சுவலி காரணமாக சசிகலா கணவர் ம.நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More