Hi manisat
#ref-menu

Sunday, March 11, 2018

ஆட்டுக்கறி பிரியாணியுடன் கலப்பதற்காக வெட்டப்பட்ட கன்றுக்குட்டிகளின் கறி, 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை

*ஆட்டுக்கறி பிரியாணியுடன் கலப்பதற்காக வெட்டப்பட்ட கன்றுக்குட்டிகளின் கறி, 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை,*

*சென்னையில் பிரியாணி கடைகளில் ஆட்டுக்கறியுடன் கலப்பதற்காக கன்றுக்குட்டிகளின் கறியை விற்றதாக, 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.*

*சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றின் கரையில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினரும், எழும்பூர் போலீசாரும் சோதனை நடத்தினர். துர்நாற்றம் வீசும் பகுதியில் இருந்த 600 கிலோ கறியை பறிமுதல் செய்த அவர்கள், 7 பேரை பிடித்து விசாரித்தனர். அவை வெளிமாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கன்றுக்குட்டிகளின் கறி என்பதும், ஆட்டுக்கறியைப் போல இருப்பதற்காக எலும்புகள் இல்லாமல், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.*

*இவற்றை சென்னையில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் வாங்கிச் சென்று, சுவையூட்டிகள் கலந்து மட்டன் பிரியாணியாக சமைத்து விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கறி, பின்னர் அழிக்கப்பட்டது.*

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More